புதுச்சேரியில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெட்டிக் கொலை; தப்பிய மர்ம கும்பல்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் பெட்ரோல் பங்க் உரிமையாளரை வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி அய்யங்குட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (55). இவர், கரசூர் பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார்.

இந்நிலையில், புருஷோத்தமன் பெட்ரோல் பங்க்கில் இருந்து நேற்று (மார்ச் 24) இரவு வீடு திரும்பினார். அப்போது, ஊசுட்டேரி பகுதியில் வந்தபோது மர்ம கும்பல் அவரை வெட்டி விட்டுத் தப்பியோடியது.

புருஷோத்தமனின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர், காவல் துறைக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த புருஷோத்தமனை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு புருஷோத்தமன் உயிரிழந்தார்.

இந்த கொலைச் சம்பவம் குறித்து, வில்லியனூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து வில்லியனூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புருஷோத்தமனைக் கொலை செய்த மர்ம கும்பலையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்