மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போக்சோ கைதி: கழிவறை வென்டிலேட்டர் வழியாக தப்பியோட்டம்

By டி.ஜி.ரகுபதி

வலிப்பு ஏற்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போக்சோ கைதி, கழிவறை வென்டிலேட்டர் வழியாக தப்பிச் சென்றார்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகேயுள்ள தாமரைப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (37). கட்டிடத் தொழிலாளியான இவர், 6.9.2019 அன்று 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தாராபுரம் மகளிர் காவல்துறையினரால் போக்சோ பிரிவில் கைது செய்யப்பட்டார். பின்னர், 2.10.2019 அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சுப்பிரமணிக்கு கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி வலிப்பு ஏற்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (பிப்.13) அதிகாலை கைதிகள் வார்டில் உள்ள கழிவறைக்குச் சென்ற கைதி சுப்பிரமணி, அங்கிருந்த வென்டிலேட்டர் வழியாக தப்பிச் சென்றார்.

இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தவறவிடாதீர்!

இளைஞர் கொலை வழக்கு: தந்தை, தாய், சகோதரர் உள்பட 4 பேர் கைது

காதலை கைவிட மறுத்த இளைஞர் கொலை- பெண்ணின் தம்பி கைது

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து: டேங்கர் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கல் குவாரிக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயி லாரி ஏற்றி கொலை: செய்யாறு அருகே ஓட்டுநரை கைது செய்து போலீஸார் விசாரணை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்