மதுரை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: காவலர் உட்பட 3 பேர் பரிதாப பலி

By எஸ்.ஸ்ரீனிவாசகன்

மதுரை அருகே டி.கல்லுப்பட்டியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காவலர் உட்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.

மதுரை மாவட்டம் எம்.சுப்பலாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் பாண்டி (33). இவர் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்துவந்தார். இவரும் இவரது உறவினர் ஜெயபாண்டியும் (18) இன்று காலை எம்.சுப்பலாபுரத்திலிருந்து திருமங்கலத்திற்கு டூவீலரின் சென்றனர். இதேபோல் தேனியில் இருந்து கேசவன்(19), எத்தனராஜா(21) ஆகிய இருவரும் ராஜபாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

டி.கல்லுப்பட்டி அருகே இந்த இருவாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் கார்த்திக் பாண்டி, கேசவன், எத்தனராஜா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஜெயபாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

10 mins ago

சினிமா

17 mins ago

விளையாட்டு

40 mins ago

வணிகம்

52 mins ago

இந்தியா

54 mins ago

சினிமா

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்