ரஜினி சார் தன் வேலையின் மீது கொண்ட காதல் அலாதியானது என்று '2.0' இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் கூறினார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் '2.0'. துபாயில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா BURJ PARK-ல் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த '2.0' படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
இதன் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் தனது குடும்பத்தினரோடு கலந்து கொண்டார். இவ்விழாவில் தனுஷ் பேசியதாவது:
இது இந்திய சினிமாவின் ஆகச் சிறந்த, பிரம்மாண்டமான படம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு பெருமைப்படுகிறேன். கொஞ்சம் பிரபலமான நடிகர்களே சிறிது நேர வேலைக்குப் பிறகு கிளம்பிவிடும் நிலையில், ரஜினி மறுநாள் அதிகாலை வரை கூட அதே உற்சாகத்துடன் வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன். அவர் தன் வேலையின் மீது கொண்ட காதல் அலாதியானது. அதனால்தான் அவரைத் தேடி எல்லாம் வருகின்றன. அவர் எதையும் துரத்திப் போவதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
11 hours ago
சினிமா
11 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
13 hours ago