'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகுக்கு திரும்ப இருக்கிறார் கஜோல்
கலைப்புலி எஸ்.தாணு, தனுஷின் வுண்டர்பார் பட நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமான ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. முதல் காட்சியை நடிகர் ரஜினிகாந்த் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த விவேக், சரண்யா பொன்வண்ணன், பி. சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் இதில் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இந்தி நடிகை கஜோல் நடிக்கிறார். தனுஷ் கதை,வசனம் எழுதி நடிக்கும் இப்படத்தின் திரைக்கதை, இயக்கம் ஆகிய பொறுப்புகளை சௌந்தர்யா ரஜினிகாந்த் கவனிக்கிறார்.
முதல் பாகத்திலே சரண்யா பொன்வண்ணனின் கதாபாத்திரம் இறந்துவிட்டதே என்று படக்குழுவிடம் கேட்ட போது, "அதை நீங்கள் படத்தில்தான் பார்க்க வேண்டும். இப்படத்திலும் அவர் நடிக்கவிருக்கிறார் என்பதை மட்டும் இப்போது சொல்ல முடியும்" என்று தெரிவித்தார்கள்.
மேலும், 'மின்சார கனவு' படத்தில் பிரபுதேவாவுக்கு நாயகியாக நடித்தவர் கஜோல். அதற்குப் பிறகு எந்த தமிழ் படத்திலும் அவர் நடிக்கவில்லை. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 'வேலையில்லா பட்டதாரி 2'வில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கஜோல்.
தற்போது இப்படத்துக்கான போட்டோ ஷூட் டெல்லியில் நடைபெற்று வருகிறது. ஜனவரியில் தொடங்கி மொத்த படப்பிடிப்பையும் 3 மாதத்தில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
இந்தியா
17 mins ago
இந்தியா
29 mins ago
இந்தியா
39 mins ago
இந்தியா
47 mins ago
சுற்றுச்சூழல்
57 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
52 mins ago
விளையாட்டு
1 hour ago
கருத்துப் பேழை
4 hours ago
தமிழகம்
3 hours ago