‘இரவின் நிழல்’ இயக்குநர் பொய்யான தகவலை பரப்புகிறார் - பார்த்திபனை அலறவிட்ட அமேசான் ப்ரைம்

By செய்திப்பிரிவு

‘இரவின் நிழல் படம் குறித்து இயக்குநர் பார்த்திபன் தொடர்ந்து பொய்யான தகவலை பரப்பி வருகிறார்’ என அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்து வெளியான ‘இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த ஜூலை 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் வரலட்சுமி சரத்குமார், பிரியங்கா ருத், ரோபோ சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார். உலக அளவில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக இந்தப் படம் உருவானதாக படக்குழுவால் சொல்லப்பட்டது. 64 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள நகரும் மற்றும் நகராத செட்டுகள் மூலம் காட்சிகள் உருவாக்கப்பட்டன.

இந்தப் படத்திற்கு பல்வேறு பாராட்டுகளும், நேர்மறை, எதிர்மறை விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. படம் திரையரங்குகளில் வெளியாகி 3 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் ஓடிடி ரிலீஸ் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனிடையே அண்மையில், ‘இரவின் நிழல்’ திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என பார்த்திபன் ட்விட்டரில் தெரிவித்திருந்த நிலையில், இன்று படம் அமேசான் ப்ரைமில் வெளியானது.

இந்நிலையில் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ‘இரவின் நிழல்’ படத்தை க்ளிக் செய்து ஓபன் செய்தால், படத்தின் தொடக்கத்தில் ட்ரிவியா (Trivia) என்ற தகவல் பிரிவில், “உண்மை என்னவென்றால், இது உலகத்தின் இரண்டாவது சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம். இதன் இயக்குநர் தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

6 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்