மீண்டும் இயக்குநர் ஆவது தொடர்பாக நடிகர் மாதவன் வெளிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: நம்பி விளைவு'. இந்தப் படத்தை நடிகர் மாதவனே நடித்து இயக்கியிருந்தார். ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்தப் படத்திற்கு பிறகு மாதவன் 'தோக்கா' என்ற படத்தில் நடித்துள்ளார். இதுதொடர்பான விழா ஒன்றில் கலந்துகொண்ட மாதவன் தனது எதிர்கால திட்டங்கள் குறித்து பேசியுள்ளார். "இப்போது நடிப்பு வாழ்க்கையில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். மேலும், எந்த படத்தையும் இயக்குவதில் எனக்கு இப்போது ஆர்வம் இல்லை.
எதிர்காலத்தில் இயக்குநர் பொறுப்பை மீண்டும் எடுப்பேன் என நினைக்கவில்லை. நான் ஒரு தற்செயலான இயக்குநர்... எனவே நான் இன்னொரு படத்தை இயக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது." என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
சினிமா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
வணிகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
க்ரைம்
6 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
க்ரைம்
7 hours ago
இந்தியா
7 hours ago
சினிமா
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago