அதர்வாவுக்கு வில்லனாக அனுராக் கஷ்யாப் உடன் பேச்சு

By ஸ்கிரீனன்

'இமைக்கா நொடிகள்' படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்துக்கு அனுராக் கஷ்யாப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது படக்குழு.

'இமைக்கா நொடிகள்' படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கவிருக்கிறார்.

அதர்வா, நயன்தாரா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் இப்படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குநராக செல்வகுமார், வசனகர்த்தாவாக பட்டுக்கோட்டை பிரபாகர், இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா, படத்தொகுப்பாளராக புவன் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இப்படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள்.

இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்காக இந்தியாவின் முன்னணி நபர்களில் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக படக்குழு அறிவித்தது. இது குறித்து படக்குழு ஒருவரிடம் விசாரித்த போது "இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநர் அனுராக் கஷ்யாப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், இன்னும் எதுவுமே முடிவாகவில்லை" என்று தெரிவித்தார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'அகிரா' இந்திப் படத்தில் அனுராக் கஷ்யாப் தான் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. இப்படத்தில் அதர்வாவுக்கு நாயகியாக அல்லாமல் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் நயன்தாரா என்பது நினைவுக்கூறத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

உலகம்

31 mins ago

தமிழகம்

40 mins ago

இந்தியா

47 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்