மாவீரன் (மகதீரா), நான் ஈ படங்கள் மூலம் தமிழகத்தில் பிரபலமான இயக்குனர் எஸ். எஸ். ராஜமௌலி அடுத்து இயக்கிக் கொண்டிருக்கும் திரைப்படம் பாஹூபலி. (தமிழில் மகாபலி)
மகதீராவைத் தொடர்ந்து இத்திரைப்படமும் வரலாற்றுப் பின்னணியில் அமைந்துள்ளது. பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்படும் இத்திரைப்படத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்க, உடன் அனுஷ்கா, நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
அன்னபூர்ணா ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தற்போது, நடிகை தமன்னாவும் பாஹூபலி படத்தில் இணைந்துள்ளார். படத்தில் அவருக்கு அவந்திகா என்ற முக்கியமான வேடம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வரும் பாஹூபலி, மலையாளம், இந்தி மொழிகளோடு இன்னும் பல அந்நிய மொழிகளிலும் டப் செய்யப்படவுள்ளது. படத்தில் இடம்பெறும் போர் காட்சிகள் சர்வதேச படங்களுக்கு கிராஃபிக்ஸ் அமைக்கும் தொழில்நுட்ப கலைஞர்களால் வடிவமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
உலகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
சினிமா
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago