செப்டம்பரில் வெளியாகிறது போகன்

By ஸ்கிரீனன்

லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 'போகன்' திரைப்படம் செப்டம்பரில் வெளியாக இருக்கிறது.

'மிருதன்' படத்தைத் தொடர்ந்து 'ரோமியோ ஜூலியட்' இயக்குநர் லட்சுமண் இயக்கத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அரவிந்த்சாமி, ஹன்சிகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை பிரபுதேவா தயாரித்து வருகிறார். இசையமைப்பாளராக இமான் பணியாற்றுகிறார்.

சென்னையில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் ஜெயம் ரவி. ஜெயம் ரவி, அரவிந்த்சாமி இருவருமே போலீஸ் அதிகாரிகள் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது.

இப்படத்தில் விக்ரம் என்ற பாத்திரத்தில் ஜெயம் ரவியும், விக்ரமாதித்யன் என்ற பாத்திரத்தில் அரவிந்த்சாமியும் நடித்து வருவதாக இயக்குநர் லட்சுமண் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும், அரவிந்த்சாமி முழுக்க போலீஸ் அதிகாரியாக வரவில்லை என்றும், படத்தில் அவருடைய பாத்திரம் புதுமையானதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார் இயக்குநர்.

சென்னையில் படப்பிடிப்பைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிக்கு சென்று இரண்டு பாடல்களை படமாக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. செப்டம்பரில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்