விஜய் சேதுபதிக்கு நாயகியாக மஞ்சிமா மோகனிடம் பேச்சு

By ஸ்கிரீனன்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் படத்தின் நாயகி வேடத்துக்கு மஞ்சிமா மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

'அனேகன்' படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கவிருக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி - டி.ராஜேந்தர் நடிக்கவிருக்கிறாரகள். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்க இருக்கிறார்.

கே.வி.ஆனந்த் படங்களில் வழக்கமாக கதை, திரைக்கதை, வசனத்தில் பங்கெடுக்கும் எழுத்தாளர்கள் சுபாவும் இந்த படத்தில் பணியாற்றவுள்ளனர். கே.வி.ஆனந்த், விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் என்ற வித்தியாசமான இணை சேர்ந்திருப்பது பலருக்கும் இப்போதே ஆவலை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் நாயகி வேடத்துக்கு மஞ்சிமா மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். விரைவில் அவர் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

இயக்குநர் ரத்தின சிவா இயக்கத்தில் 'றெக்க' படத்தின் படப்பிடிப்பை முடித்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விஜய் சேதுபதி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்