‘குற்றப்பரம்பரை’ விவகாரம்: இயக்குநர் பாலாவுக்கு ரத்னகுமார் விளக்கம்

By செய்திப்பிரிவு

“நான் எழுதிய ‘குற்றப்பரம்பரை’ கதையின் கதாபாத்திரங்களை வைத்துதான் ‘கூட்டாஞ்சோறு’ நாவல் எழுதப்பட்டுள்ளது. இரண்டும் ஒரே கதைதான்” என்று எழுத்தாளர் ரத்னகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ரத்னகுமார் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

நான் 1999-ல் ‘குற்றப்பரம்பரை’ என்ற கதையை எழுதி தமிழ்நாடு எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். இதில் வரும் பாத்திரங்களை வைத்து 2002-ல் ‘கூட்டாஞ்சோறு’ என்ற பெயரில் வேல ராமமூர்த்தி ஒரு கதையை எழுதினார். இதுகுறித்து வேல.ராமமூர்த்தியிடம் கேட்டபோது, ‘நான் எழுதினது வேறண்ணே’ என்றார். ‘கூட்டாஞ்சோறு’ கதையின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து தன் கற்பனையையும் சேர்த்து படம் எடுக்கப்போவதாக பாலா தற்போது கூறியுள்ளார். அவர் எடுக்க திட்டமிட்டிருக்கும் அந்த ஒரு பகுதியிலும் என் கதை இருக்கிறது.

இப்படத்துக்கு ‘கூட்டாஞ்சோறு’ என்று பெயர் வைத்தால்கூட பரவாயில்லை. முதலில் ‘குற்றப்பரம்பரை’ என்ற பெயரையே வைக்க திட்டமிட்டனர். அதுகுறித்து பாலாவிடம் பாரதிராஜா கேட்டபோது, அந்த பெயரில் எடுக்கவில்லை என்று ஆரம்பத்தில் உறுதியாக சொல்லாததால்தான் இந்த அளவுக்கு பிரச்சினை வளர்ந்தது.

இயக்குநர் பாலா ‘அவன் இவன்’, ‘பிதாமகன்’ மாதிரி ‘குற்றப்பரம்பரை’யை எடுத்து அசிங்கப்படுத்தகூடாது. என் பக்கம் நியாயம் இருக்கிறது. பாலாவின் மிரட்டலை அடுத்து எனக்கும் என் குடும்பத்துக்கும் காவல் துறையும், நீதித்துறையும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு ரத்னகுமார் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

42 mins ago

சினிமா

52 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்