அருள்நிதி நடிப்பில் ‘டிமான்ட்டி காலனி 2’ உருவாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’. 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மு.க. தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டது.
இந்தப் படத்துக்குப் பிறகு முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார் அஜய் ஞானமுத்து. சுமார் 7 ஆண்டுகள் கழித்து இதன் 2-ம் பாகத்தில் அருள்நிதி நடிக்கவுள்ளார். அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெங்கி என்பவர் கூறிய கதை அருள்நிதிக்கு மிகவும் பிடித்துள்ளது.
ஆகையால், அந்தக் கதையினை ‘டிமான்ட்டி காலனி 2’ என்ற பெயரில் படமாக்க முடிவு செய்துள்ளார் அருள்நிதி. முதல் பாகத்தின் கதைக்கும், இரண்டாம் பாகத்துக்கும் சம்பந்தம் கிடையாது என்கிறார்கள். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
இந்தியா
8 mins ago
தமிழகம்
1 min ago
இந்தியா
19 mins ago
க்ரைம்
36 mins ago
இந்தியா
46 mins ago
விளையாட்டு
35 mins ago
இந்தியா
51 mins ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
தொழில்நுட்பம்
9 hours ago