3 நாயகிகள்... அசோக் செல்வனின் ‘நித்தம் ஒரு வானம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

அசோக் செல்வன் நடித்து வரும் புதிய படத்துக்கு ‘நித்தம் ஒரு வானம்’ எனத் தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

தமிழில் ‘ஹாஸ்டல்’, ‘மன்மதலீலை’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அசோக் செல்வன். இது தவிர்த்து ஆர்.கார்த்திக் படத்திலும் நடித்து வந்தார். இந்தப் படத்தினை வயகாம் 18 ஸ்டூடியோஸும், பெண்டெலா சாகரின் ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட்டும் இணைந்து தயாரித்து வந்தன.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (பிப்ரவரி 7) வெளியிடப்பட்டது. இதற்கு ‘நித்தம் ஒரு வானம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை துல்கர் சல்மான் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

சில வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிக்க ‘வான்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட படம் தான் இது. படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

‘நித்தம் ஒரு வானம்’ படத்தில் ரீத்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா என 3 நாயகிகள் அசோக் செல்வனுடன் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக விது அய்யனா, இசையமைப்பாளராக கோபி சுந்தர், கலை இயக்குநராக கமலநாதன், எடிட்டராக ஆண்டனி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

20 mins ago

தமிழகம்

41 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்