அசோக் செல்வன் நடித்து வரும் புதிய படத்துக்கு ‘நித்தம் ஒரு வானம்’ எனத் தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
தமிழில் ‘ஹாஸ்டல்’, ‘மன்மதலீலை’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அசோக் செல்வன். இது தவிர்த்து ஆர்.கார்த்திக் படத்திலும் நடித்து வந்தார். இந்தப் படத்தினை வயகாம் 18 ஸ்டூடியோஸும், பெண்டெலா சாகரின் ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட்டும் இணைந்து தயாரித்து வந்தன.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (பிப்ரவரி 7) வெளியிடப்பட்டது. இதற்கு ‘நித்தம் ஒரு வானம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை துல்கர் சல்மான் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
சில வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிக்க ‘வான்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட படம் தான் இது. படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
‘நித்தம் ஒரு வானம்’ படத்தில் ரீத்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா என 3 நாயகிகள் அசோக் செல்வனுடன் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக விது அய்யனா, இசையமைப்பாளராக கோபி சுந்தர், கலை இயக்குநராக கமலநாதன், எடிட்டராக ஆண்டனி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
20 mins ago
தமிழகம்
41 mins ago
இந்தியா
27 mins ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
5 hours ago