நாயகியை மையப்படுத்தும் கதையில் ஹன்சிகா; தயாரிப்பாளர் ஆகிறார் ‘வாலு’ இயக்குநர்

By செய்திப்பிரிவு

ஹன்சிகா நடிக்கவுள்ள புதிய படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகிறார் இயக்குநர் விஜய் சந்தர்.

சிம்பு நடித்த ‘வாலு’, விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’ மற்றும் விஜய் சேதுபதி நடித்த ‘சங்கத்தமிழன்’ ஆகிய படங்களை இயக்கியவர் விஜய் சந்தர். தனது அடுத்தப் படத்திற்காக மும்முரமாக கதையை எழுதி வருகிறார்.

இதனிடையே, தற்போது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார் விஜய் சந்தர். இவர் தயாரிக்கும் படத்தில் ஹன்சிகா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முழுக்க முழுக்க நாயகியை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகவுள்ளது.

இந்தப் புதிய படத்தை கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து, நடித்துள்ள ‘கூகுள் குட்டப்பா’ படத்தை இயக்கிய சரவணன் இயக்கவுள்ளார்.

தற்போது படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்