சூர்யா நடிக்கும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தன.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் படம் 'எதற்கும் துணிந்தவன்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியவுடன் கடந்த செப்டம்பர் மாதம் காரைக்குடியில் முக்கியக் காட்சிகளின் படப்பிடிப்பை 51 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தி முடித்தது படக்குழு.
காரைக்குடி படப்பிடிப்பு முடிவடைந்தத பின் 5 நாட்கள் இடைவெளிவிட்டு, அடுத்தகட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று (நவ.10) 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனை இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிகட்ட நிறைவடைந்து இந்த ஆண்டு இறுதியில் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிகின்றனர்.
#EtharkkumThunindhavan
Shooting wrapped up successfully !
I sincerely thank my production house @Sunpictures ,
our hero @Suriya_offl sir, @RathnaveluDop sir and my team for all the support extended
More updates coming soon
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
இந்தியா
9 mins ago
சுற்றுச்சூழல்
19 mins ago
இந்தியா
22 mins ago
இந்தியா
29 mins ago
இந்தியா
14 mins ago
விளையாட்டு
35 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
10 hours ago