'ஜெய் பீம்’ பார்த்தேன்; கண்கள் குளமானது: கமல் பாராட்டு

By செய்திப்பிரிவு

'ஜெய் பீம்' பார்த்தேன். கண்கள் குளமானது என்று கமல் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். தற்போது 'ஜெய் பீம்' பார்த்துவிட்டு கமலும் தனது ட்விட்டர் பதிவில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கமல் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

" 'ஜெய் பீம்’ பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் த.செ.ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா, படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்".

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

5 mins ago

வணிகம்

17 mins ago

இந்தியா

42 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

வணிகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்