தன்னைப் பற்றிய அவதூறான தகவல்களைப் பரப்பிய சில யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
சமீபத்தில் தனது கணவரும், நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக சமந்தா அறிவித்தார். நாக சைதன்யாவும் இதே அறிக்கையைப் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து சமந்தாவின் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து சமூக ஊடகங்களிலும், சில யூடியூப் சேனல்களிலும் விவாதிக்கப்பட்டன.
இன்னொரு பக்கம் இந்த விவாகரத்துக்குக் காரணம் சமந்தாதான் என்று அவரைப் பலரும் குற்றம்சாட்டி துன்புறுத்தி வந்தனர். இதனிடையே, தனது தனிப்பட்ட விவாகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம் என்றும், எந்த விதமான எதிர்மறை விஷயங்களும் தன்னை பாதிக்காது என்றும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் இந்த விவகாரத்தில் நாக சைதன்யாவோ, அவரது குடும்பத்தில் மற்றவர்களோ சமந்தாவுக்கு ஆதரவு தரவில்லை.
இந்நிலையில் தன்னைப் பற்றி அவதூறாகத் தகவல்கள் பரப்பிய சுமன் டிவி, தெலுகு பாப்புலர் டிவி உள்ளிட்ட சில யூடியூப் சேனல்கள் மீது சமந்தா மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் வெங்கட் ராவ் என்கிற வழக்கறிஞர் தனது திருமண வாழ்க்கை குறித்தும், தனக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் தவறாகப் பேசியதால், அவர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
விவாகரத்தைச் சுற்றி எழுந்திருக்கும் தேவையில்லாத சர்ச்சையால் மனதளவில் சோர்வடைந்திருந்தாலும், தனது உரிமைக்காகக் குரல் கொடுக்கும் சமந்தாவின் இந்த நடவடிக்கையை அவரது ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
5 mins ago
சினிமா
56 mins ago
வலைஞர் பக்கம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
2 hours ago