'சந்திரமுகி 2' அப்டேட்: நாயகியாக அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை

By செய்திப்பிரிவு

'சந்திரமுகி 2' படத்தில் நாயகியாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'சந்திரமுகி'. இந்தப் படத்தின் 2-ம் பாகத்தின் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

பி.வாசு இயக்கவுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ரஜினியின் அனுமதியோடு இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் லாரன்ஸ். 'சந்திரமுகி' படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரம் பெருவாரியாகப் பேசப்பட்டது. அதேபோல் 'சந்திரமுகி 2' படத்திலும் ஒரு முக்கியமான நாயகி கதாபாத்திரம் உள்ளது.

அதில் நடிப்பதற்காக முதலில் அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முதலில் அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். தற்போது உடலை மீண்டும் குறைத்து நடிப்பதற்குக் கதைகள் கேட்டு வருகிறார். இதனால் மீண்டும் 'சந்திரமுகி 2' படக்குழுவினர் அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இந்தப் படத்தில் வடிவேலு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதனை சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் வடிவேலுவே உறுதிப்படுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

ஜோதிடம்

18 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்