முதலில் உதயநிதி படம்: மாரி செல்வராஜ் முடிவு

By செய்திப்பிரிவு

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தைத் தான் முதலில் இயக்கவுள்ளார் மாரி செல்வராஜ்.

'பரியேறும் பெருமாள்' மற்றும் 'கர்ணன்' ஆகிய படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ். இவருடைய அடுத்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. பா.இரஞ்சித் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் பணிகளைத் தொடங்கினார். இதில் கபடி வீரராக நடிக்க தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார் துருவ் விக்ரம்.

துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமானார் மாரி செல்வராஜ். ஆனால், இப்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. துருவ் விக்ரம் படத்துக்கு முன்பாகவே உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் மாரி செல்வராஜ்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மகிழ் திருமேனி படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, 'ஆர்டிகிள் 15' தமிழ் ரீமேக் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு, டிசம்பரில் மாரி செல்வராஜ் படத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளார்.

'மகான்' படத்தை முடித்துவிட்டதால், துருவ் விக்ரமின் அடுத்த படம் என்ன என்பது விரைவில் தெரியவரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

22 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்