விஜய் மில்டன் இயக்கத்தில் ராஜகுமாரனுக்கு நாயகியாக நடிக்கவில்லை என்று நடிகை சமந்தா மறுப்பு தெரிவித்தார்.
'கோலி சோடா' படத்தைத் தொடர்ந்து விக்ரமை நாயகனாக வைத்து '10 எண்றதுக்குள்ள' படத்தை இயக்கினார் இயக்குநர் விஜய் மில்டன். அப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
'10 எண்றதுக்குள்ள' படத்துக்கு முன்பாகவே, டி.ராஜேந்தரை நாயகனாக வைத்து ஒரு கதையை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. டி.ராஜேந்தர் நாயகனாக நடிக்கவிருந்த அப்படத்தில் தற்போது நாயகனாக ஒப்பந்தமாகி இருக்கிறார் ராஜகுமாரன். இப்படத்தில் பரத் வில்லனாக நடிக்க இருக்கிறார்.
'10 எண்றதுக்குள்ள' படத்தில் நாயகியாக நடித்த சமந்தா, இப்படத்தில் ராஜகுமாரனுக்கு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளியாகின. விஜய் மில்டன் கேட்டுக் கொண்டதால் இப்படத்தை சமந்தா ஒப்புக் கொண்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள்.
இது குறித்து சமந்தாவிடம் கேட்ட போது, "அப்படி ஒரு படத்தை நான் ஒப்புக் கொள்ளவே இல்லை" என்று தெரிவித்தார். இப்படத்தின் படப்பிடிப்பை இம்மாதம் முதல் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ராஜகுமாரன், பரத் ஆகியோருடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்து.
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
ஓடிடி களம்
13 mins ago
இந்தியா
22 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago