பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்

By செய்திப்பிரிவு

பா.இரஞ்சித் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க விக்ரம் ஒப்பந்தமாகியுள்ளார்.

'சார்பட்டா பரம்பரை' படத்தின் மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தை இயக்கி வருகிறார் பா.இரஞ்சித். இதில் காளிதாஸ், அசோக் செல்வன், துஷாரா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தை முடித்துவிட்டு, விக்ரம் நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்கவுள்ளார் பா.இரஞ்சித். இதனை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை அனைத்து முடிந்து, ஒப்பந்தம் மட்டும் கையெழுத்தாகாமல் உள்ளதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் 'மெட்ராஸ்' படத்தை இயக்கினார் பா.இரஞ்சித். அந்நிறுவனம் தயாரிப்பில் 2 படங்கள் இயக்க ஒப்பந்தமாகி இருந்தார். 'மெட்ராஸ்' படத்துக்குப் பிறகு வெவ்வேறு படங்கள் ஒப்பந்தமானதால், ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் மற்றொரு படத்தைத் தற்போதுதான் இயக்கவுள்ளார்.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது 'கோப்ரா' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம். அதனை முடித்துவிட்டு பா.இரஞ்சித் படத்தின் பணிகளைத் தொடங்குவார் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்