'அந்தகன்' படப்பிடிப்பு நிறைவு: செப். வெளியீடு

By செய்திப்பிரிவு

'அந்தகன்' படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டது எனவும், செப்டம்பரில் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தியில் பெரும் வரவேற்பு பெற்ற 'அந்தாதூன்' படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வந்தது. 'அந்தகன்' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கி வருகிறார். அவரது ஸ்டார் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்துள்ளார். நாயகியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். அவருடன் சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிகுமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், செம்மலர், பூவையார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவு பெற்றுள்ளது. இதன் இறுதிக்கட்டப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், க்ளைமாக்ஸ் காட்சியை மட்டும் வெளிநாட்டில் படமாக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு. இதற்காக ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாடு செல்லவுள்ளது. செப்டம்பரில் வெளியிடவும் படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்தப் படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளராக ரவியாதவ், கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

4 mins ago

இந்தியா

27 mins ago

விளையாட்டு

19 mins ago

இந்தியா

27 mins ago

தமிழகம்

52 mins ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

மேலும்