ஓடிடியில் 'திட்டம் இரண்டு' படத்தின் வெளியீட்டுத் தேதி முடிவாகியுள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கப்பட்ட படம் 'திட்டம் இரண்டு'. விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படம் மிஸ்ட்ரி த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. சென்னையிலேயே ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டது படக்குழு.
தற்போது இறுதிக்கட்டப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. ஆனால், திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாமல் உள்ளது. இதனால் 'திட்டம் இரண்டு' படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு.
இறுதியாக, 'திட்டம் இரண்டு' படத்தின் உரிமையை சோனி லைவ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியது. தற்போது இந்தப் படத்தினை ஜூலை 30-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளது. சமீபத்தில் வெளியான 'வாழ்' படத்துக்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் சோனி லைவ் ஓடிடி குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்
முக்கிய செய்திகள்
இந்தியா
38 mins ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
3 hours ago
உலகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
வேலை வாய்ப்பு
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
கல்வி
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago