ரஜினி நடித்து வரும் 'அண்ணாத்த' படப்பிடிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'அண்ணாத்த'. சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்காக சில முக்கிய காட்சிகளைப் படமாக்க வேண்டியதுள்ளது.
இதனை மேற்கு வங்கத்தில் படமாக்கப் படக்குழு திட்டமிட்டது. இதற்காக இன்று (ஜூலை 14) ரஜினி அங்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால், தற்போது மேற்கு வங்கத்தில் நடைபெற வேண்டிய படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் படப்பிடிப்பு நடத்த இன்னும் சில அனுமதிகளுக்காகப் படக்குழு காத்திருப்பதாகத் தெரிகிறது. அதற்கு முன்னதாக சென்னையில் சில காட்சிகளைப் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்குள் மேற்கு வங்கத்தில் அனுமதி கிடைத்துவிட்டு, அதன் பின்பு படப்பிடிப்பைத் திட்டமிட முடிவு செய்துள்ளது படக்குழு.
மேற்கு வங்க படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தவுள்ளது படக்குழு. அனைத்து பணிகளையும் முடித்து தீபாவளிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
சினிமா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
வணிகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
க்ரைம்
6 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
க்ரைம்
7 hours ago
இந்தியா
7 hours ago
சினிமா
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago