சிம்பு நடிக்கவுள்ள 'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்தின் கதையில் எழுத்தாளர் ஜெயமோகன் பணிபுரியவுள்ளார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள படம் 'நதிகளிலே நீராடும் சூரியன்'. வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார். பாடலாசிரியராக தாமரை பணிபுரிந்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. இதற்கான படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்யும் பணியில் படக்குழு தீவிரமாகப் பணிபுரிந்து வருகிறது. மேலும், சிம்புவுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது.
தற்போது இந்தக் கதையில் எழுத்தாளர் ஜெயமோகனும் பணிபுரிந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. எப்போதுமே கெளதம் மேனன் அவரே முழுமையாக கதை, திரைக்கதை அனைத்தையும் எழுதிவிடுவார். முதன்முறையாக ஜெயமோகனுடன் கைகோத்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
'நான் கடவுள்', 'அங்காடித் தெரு', 'கடல்', 'பாபநாசம்', '2.0', 'சர்கார்', 'இந்தியன் 2', 'பொன்னியின் செல்வன்', 'விடுதலை' உள்ளிட்ட பல படங்களில் எழுத்தாளர் ஜெயமோகன் பணிபுரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
38 mins ago
ஜோதிடம்
48 mins ago
விளையாட்டு
5 hours ago
சினிமா
6 hours ago
விளையாட்டு
7 hours ago
வணிகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
க்ரைம்
9 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
க்ரைம்
10 hours ago
இந்தியா
10 hours ago