'நதிகளிலே நீராடும் சூரியன்' அப்டேட்: எழுத்தாளர் ஜெயமோகன் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

சிம்பு நடிக்கவுள்ள 'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்தின் கதையில் எழுத்தாளர் ஜெயமோகன் பணிபுரியவுள்ளார்.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள படம் 'நதிகளிலே நீராடும் சூரியன்'. வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார். பாடலாசிரியராக தாமரை பணிபுரிந்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. இதற்கான படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்யும் பணியில் படக்குழு தீவிரமாகப் பணிபுரிந்து வருகிறது. மேலும், சிம்புவுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது.

தற்போது இந்தக் கதையில் எழுத்தாளர் ஜெயமோகனும் பணிபுரிந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. எப்போதுமே கெளதம் மேனன் அவரே முழுமையாக கதை, திரைக்கதை அனைத்தையும் எழுதிவிடுவார். முதன்முறையாக ஜெயமோகனுடன் கைகோத்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

'நான் கடவுள்', 'அங்காடித் தெரு', 'கடல்', 'பாபநாசம்', '2.0', 'சர்கார்', 'இந்தியன் 2', 'பொன்னியின் செல்வன்', 'விடுதலை' உள்ளிட்ட பல படங்களில் எழுத்தாளர் ஜெயமோகன் பணிபுரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

38 mins ago

ஜோதிடம்

48 mins ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்