காண்டம் கேக்குறது தப்பா? இதைப் பற்றி பேசுவது எனக்கு காமெடியாகவும், சிரிப்பாகவும் இருக்கிறது என்று விஷால் கூறியுள்ளார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடிப்பில் சமீபத்தில் 'கதகளி' ட்ரெய்லர் வெளியானது. இதில் விஷால் மருந்துக்கடையில் வேலை செய்யும் கேத்ரீன் தெரசாவிடம் காண்டம் இருக்கா என கேட்பார். இந்த காட்சி ட்ரெய்லரில் வெளியானது. இதுகுறித்து ராதிகா தன் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
''காண்டம் பற்றி ட்ரெய்லரில் வந்தது குற்றம். இதற்காக யாராவது மன்னிப்பு கேட்பார்களா? என் மகன் சிறுவன். அவன் காண்டம் பற்றி கேட்கும் கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை'' என்று ராதிகா ட்விட்டரில் கூறி இருந்தார்.
ராதிகாவின் ட்வீட் குறித்து சென்னையில் நடந்த கதகளி பத்திரிகையாளர் சந்திப்பில் விஷாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு விஷால் பதில் அளித்துப் பேசியதாவது:
''பாலியல் கல்வி பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். ஒன்றரை நிமிஷ ட்ரெய்லரில் இரண்டு முறை காண்டம் என்ற வார்த்தை வருகிறது. அதுவும் அந்த கேள்வி பார்மஸி வைத்திருக்கும் பெண்ணிடம் கேட்கப்படுகிறது.
காண்டம் எல்லா இடங்களிலும் விற்கிறார்கள். காண்டம் என்ற வார்த்தையை பேசுவதே தவறு என சொல்வதே தவறு.
அதைப்பற்றி பேச எனக்கே சிரிப்பு வருகிறது. அதில் எந்த உள்நோக்கமும் இல்லை.
சென்சார் போர்டு பார்த்து அனுமதித்த பிறகே கதகளி ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. அப்படி என்றாலும் அந்த ட்ரெய்லரை எல்லோரும் பார்க்கலாம்தானே'' என விஷால் தெரிவித்துள்ளார்.
வீடியோ இணைப்பு:
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
13 mins ago
தமிழகம்
55 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
10 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
12 hours ago