மீண்டும் நடிக்க வருகிறார் விஜயகாந்த்

By செய்திப்பிரிவு

ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்க வருகிறார் விஜயகாந்த்.

அரசியலில் தீவிர கவனம் செலுத்திய பிறகு, நடிப்பதைக் குறைத்துக்கொண்டார் விஜயகாந்த். அவர் இயக்கி நடித்த ‘விருதகிரி’ படம் 2010-ல் வெளிவந்தது. அதற்குப் பிறகு, தன் மகன் சண்முகபாண்டியன் நடித்த ‘சகாப்தம்’ படத்தில் கவுரவத் தோற்றத்தில் மட்டும் நடித்தார்.

இந்நிலையில், 5 ஆண்டு இடை வெளிக்குப் பிறகு ‘தமிழன் என்று சொல்’ என்ற படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் அவரது மகன் சண்முக பாண்டி யனும் நடிக்கிறார். இப்படத்தை அறி முக இயக்குநர் அருண் பொன்னம் பலம் இயக்குகிறார். ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். சென் னையில் நாளை நடக்கவுள்ள படத் தொடக்க விழாவுடன் படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னை தவிர, வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

37 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

32 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்