சுரேஷ் சங்கையா இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் செந்தில் நாயகனாக நடிக்கவுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் செந்தில். கவுண்டமனி - செந்தில் இணைந்த காமெடி காட்சிகள் இப்போதும் வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது. தற்போது சில படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து வருகிறார் செந்தில்.
இந்நிலையில், முதன்முறையாக ஒரு படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் செந்தில். இந்தப் படத்தை சமீர் பரத்ராம் தயாரிக்க, 'ஒரு கிடாயின் கருணை மனு' இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கவுள்ளார். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தைத் தொடர்ந்து பிரேம்ஜி நாயகனாக நடித்துள்ள 'சத்திய சோதனை' படத்தை இயக்கியுள்ளார் சுரேஷ் சங்கையா. இந்தப் படத்தையும் சமீர் பரத்ராம் தான் தயாரித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சுரேஷ் சங்கையாவின் அடுத்தப் படத்தையும் சமீர் பரத்ராம் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் சிறையிலிருந்து வரும் நபராக செந்தில் நடிக்கவுள்ளார். இதன் கதையைக் கேட்டுவிட்டு, உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் செந்தில். அவருடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
உலகம்
20 mins ago
ஆன்மிகம்
18 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
26 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
55 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago