மீண்டும் இணையும் ராஜேஷ் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி

By செய்திப்பிரிவு

ராஜேஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தின் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ளார்.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மிஸ்டர் லோக்கல்'. ராஜேஷ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. 2019-ம் ஆண்டு மே 17-ம் தேதி வெளியானது. இந்தப் படத்துக்குப் பிறகு ராஜேஷ் தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

ஹிப் ஹாப் ஆதி படத்தை இயக்கவுள்ளார், சந்தானம் படத்தை இயக்கவுள்ளார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின. ஆனால், எதுவுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தொடர்ச்சியாக இந்தக் கதையிலேயே பணிபுரிந்து வந்தார்.

தற்போது, ராஜேஷ் கதையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது. இதில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது. ஜனவரி படப்பிடிப்பைத் தொடங்கி, கோடை விடுமுறைக்கு வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தப் படத்துக்கு முன்பாகவே, ராஜேஷ் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி 'கடவுள் இருக்கான் குமாரு' என்னும் படத்தில் இணைந்து பணிபுரிந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

15 mins ago

தமிழகம்

36 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்