'நடிகன்' வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, சிபிராஜ் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.
1990-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி பி.வாசு இயக்கத்தில் வெளியான படம் 'நடிகன்'. சத்யராஜ், குஷ்பு, கவுண்டமனி, மனோரமா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ராஜ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்த இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
இப்போது வரை 'நடிகன்' படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகின்றன. இன்று (நவம்பர் 30) 'நடிகன்' படம் வெளியாகி 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை இப்படத்தின் ரசிகர்கள் #30YearsofNadigan என்ற ஹேஷ்டேகில் குறிப்பிட்டுக் கொண்டாடி வருகிறார்கள்.
'நடிகன்' படம் தொடர்பாக சத்யராஜின் மகன் சிபிராஜ் தனது ட்விட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:
"என் மனதுக்கு நெருக்கமான படம். அதன் கதை மற்றும் வெற்றியால் மட்டுமல்ல, எனது விடுமுறை சமயத்தில் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்தபோது மிக இனிமையாகக் கழிந்த நேரத்தினாலும்தான்”.
இவ்வாறு சிபிராஜ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
29 mins ago
தமிழகம்
25 mins ago
இந்தியா
49 mins ago
இந்தியா
36 mins ago
இந்தியா
59 mins ago
விளையாட்டு
51 mins ago
இந்தியா
59 mins ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago