ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்: எஸ்பிபிக்கு கமல் புகழாஞ்சலி

By செய்திப்பிரிவு

ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும் என்று மறைந்த பாடகர் எஸ்பிபிக்கு கமல் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவரது உடல்நிலை மோசமடைந்தது. சில நாட்களில் உடல்நிலை தேறியது. நேற்று மீண்டும் அவரது உடல்நிலை மோசமடைந்தது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு எஸ்பிபி காலமானார். அவருடைய மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

எஸ்பிபி மறைவு குறித்து கமல் வெளியிட்டுள்ள இரங்கல் வீடியோவில் பேசியிருப்ப்ந்தாவது:

"வெகுசில பெருங்கலைஞர்களுக்கே தாம் வாழும் காலத்திலேயே, திறமைக்குத் தகுந்த புகழ் கிடைக்கும். அப்புகழ் கிடைக்கப் பெற்றவர் என் உடன்பிறவா அண்ணன் எஸ்பிபி. நாடு தழுவிய புகழ் மழையில் நனைந்தபடியே அவரை வழியனுப்பி வைத்த அத்தனை ரசிகர்களுக்கும் அவர்களில் ஒருவனாக என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அவர் நனைந்த மழையில் கொஞ்சம் நானும் நனைய அனுமதித்த அண்ணனுக்கு நன்றி. அவர் குழலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. பல மொழிகளில் நாலு தலைமுறை திரை நாயகர்களின் குரலாக வாழ்ந்தவர். ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்”.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்