'சைக்கோ' படத்தைத் தொடர்ந்து, 'பிசாசு 2' படத்தை இயக்க மிஷ்கின் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சைக்கோ'. இந்த ஆண்டு ஜனவரி 24-ம் தேதி வெளியான இந்தப் படத்தை மிஷ்கின் இயக்கியிருந்தார். இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதற்குப் பிறகு 'துப்பறிவாளன் 2' படத்தை இயக்கி வந்தார் மிஷ்கின். அப்போது விஷாலுடன் ஏற்பட்ட மோதலால், அதன் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகினார்.
இதனால் மிஷ்கினின் அடுத்த படம் குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன. அடுத்ததாக, சிம்பு மற்றும் அருண் விஜய் ஆகிய இருவரிடமும் கதையொன்றைக் கூறியுள்ளார் மிஷ்கின். ஆனால், அந்தப் படங்கள் எப்போது தொடங்கப்படும் என்பதே தெரியாமல் உள்ளது.
இதனிடையே தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை செப்டம்பர் 20-ம் தேதி வெளியிடவுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் மிஷ்கின். அன்றைய தினம் அவருடைய பிறந்த நாளாகும்.
இந்தப் படம் குறித்து விசாரித்தபோது, இது 'பிசாசு 2' அறிவிப்பு என்றார்கள். இதனை ராக்போர்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், ஆண்ட்ரியா மற்றும் 'சைக்கோ' படத்தில் வில்லனாக நடித்த ராஜ்குமார் பிச்சுமணி ஆகிய இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர் என்றும் தெரிவித்தார்கள்.
2014-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் நாகா, பிரயாகா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பிசாசு'. பாலா தயாரிப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
விளையாட்டு
11 hours ago
சினிமா
12 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
13 hours ago