’’குறுக்கெழுத்துப் போட்டிக்கு உதவினார் பாலசந்தர் சார்’’ - மதன் கார்க்கி நினைவுகள்

By வி. ராம்ஜி

தமிழ்த் திரையுலகின் ஆளுமைகளில் ஒருவரான இயக்குநர் கே.பாலசந்தருக்கு ஜூலை 9ம் தேதி 90-வது பிறந்த நாள். ரஜினி, சரிதா, விவேக், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்களை அறிமுகப்படுத்தியவர். 'நீர்க்குமிழி', 'சர்வர் சுந்தரம்', 'இரு கோடுகள்', 'அவள் ஒரு தொடர்கதை', 'அபூர்வ ராகங்கள்', 'தண்ணீர் தண்ணீர்' உள்ளிட்ட பல்வேறு சிறந்த படங்களை இயக்கி, புகழ் பெற்றவர். 9 தேசிய விருதுகள் வென்ற கே.பாலசந்தருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் தாதா சாகேப் பால்கே விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்தது.

உடல்நலக் குறைவால் 2014ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி கே.பாலசந்தர் காலமானார். இன்று கே.பாலசந்தரின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், பிரபலமானவர்கள் ஆகியோர் கே.பி. பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார்கள்.

இதன் வீடியோ பதிவுகள் கே.பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

இதில் பாடலாசிரியரும் வசனகர்த்தாவுமான மதன் கார்க்கி வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ பதிவில் அவர் கூறியிருப்பதாவது :

எனக்கு அப்போது பத்து வயது இருக்கும். ‘ராணி வார இதழ்’என்று நினைக்கிறேன். ஒரு குறுக்கெழுத்துப் போட்டி இருந்தது. அதில், ஒரு இடத்தை நிரப்புவதற்காக, ‘பாலசந்தர் சாரின் ஒரு படம் என்று அறிவித்துவிட்டு, ஒரு ‘க்ளூ’வும் கொடுத்திருந்தார்கள்.

நான் அப்பாவிடம் கேட்டேன். ’இது என்ன படம்பா?’ என்றேன். உடனே அப்பா, ‘நீ அவர்கிட்டயே கேட்டு தெரிஞ்சுக்கோ’ என்றார். அத்துடன் பாலசந்தர் சாருக்கு போன் போட்டும் கொடுத்தார் அப்பா.

பாலசந்தர் சார் போனை எடுத்தார். நான் பேசினேன். அதில் இருக்கும் ‘ஆற்றோரத்தில் இருக்கும், வளைந்திருக்கும்’ என்பன போன்ற வாசகம் இருந்தது. நான் படித்துக் காட்டினேன். உடனே அவர், ‘அது ‘நாணல்’ என்று சொன்னார்.

’எதுக்குக் கேக்கறே?’என்று கேட்டார். ’ஒரு குறுக்கெழுத்துப் போட்டிக்காகப் பண்றேன்’ என்று சொன்னேன். உடனே பாலசந்தர் சார், ‘வாழ்த்துகள். நல்லாப் பண்ணு’ என்று சொன்னார். என்னுடைய பத்து வயதில் அவருடன் பேசியது இன்னமும் ஞாபகம் இருக்கிறது.

அவருடைய படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் ‘சிந்து பைரவி’. படத்தில் அவருடைய திரைக்கதை மிகச்சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு காட்சியும் பிரமிக்க வைக்கும். பாடல்களும் பாடல்களைப் படமாக்கிய விதமும் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

ஒரு அழகான கதையை, இசையோடு இழைத்துக் கொடுத்த அந்த விஷயம் எனக்கு ரொம்பவே பிடித்தது. நிறைய படங்கள் ரொம்பவே பிடிக்கும். ‘சிந்து பைரவி’ திரைப்படம், மனதுக்கு ரொம்பவே நெருக்கமான படம்.

இவ்வாறு மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

38 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

36 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்