தமிழ்த் திரையுலகின் ஆளுமைகளில் ஒருவரான இயக்குநர் கே.பாலசந்தருக்கு இன்று (ஜூலை 9) 90-வது பிறந்த நாள். ரஜினி, சரிதா, விவேக், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்களை அறிமுகப்படுத்தியவர். 'நீர்க்குமிழி', 'சர்வர் சுந்தரம்', 'இரு கோடுகள்', 'அவள் ஒரு தொடர்கதை', 'அபூர்வ ராகங்கள்', 'தண்ணீர் தண்ணீர்' உள்ளிட்ட பல்வேறு சிறந்த படங்களை இயக்கி, புகழ் பெற்றவர். 9 தேசிய விருதுகள் வென்ற கே.பாலசந்தருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் தாதா சாகேப் பால்கே விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்தது.
உடல்நலக் குறைவால் 2014ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி கே.பாலசந்தர் காலமானார். இன்று கே.பாலசந்தரின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், பிரபலமானவர்கள் ஆகியோர் கே.பி. பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.
இதன் வீடியோ பதிவுகள் கே.பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.
இதில் இயக்குநர் அருண்வைத்தியநாதன் வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ பதிவில் அவர் கூறியிருப்பதாவது :
’’பாலசந்தர் சார் பற்றி சொல்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. இன்றைக்கு இயக்குநர்களுக்கு ஒரு மரியாதை வருகிறதென்றால், அந்த மரியாதைக்கெல்லாம் காரணம் பாலசந்தர் சார்தான். அவர்தான் இதற்கெல்லாம் மிகப்பெரிய காரணகர்த்தாவாக இருந்தார்.
பாலசந்தர் சாரின் படங்களில் பிடித்த படம் ஒன்று, பாடல் ஒன்று என்று சொல்கிறேன்.
வெற்றிப் படங்களாகவோ, எல்லோருக்கும் தெரிந்த படங்களாகவோ இல்லாமல் அவருடைய வேறொரு படத்தைச் சொல்லுகிறேன். அவருடைய ‘47 நாட்கள்’ திரைப்படம். எழுத்தாளர் சிவசங்கரியின் கதை இது. வெளிநாட்டில் திருமணம் செய்துகொண்டு செல்லும் மனைவி, கணவனின் சீட்டிங் உள்ளிட்ட விஷயங்களில் இருந்து எப்படித் தப்பிக்கிறார் என்பதை த்ரில்லிங்காகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லியிருப்பார்.
சிரஞ்சீவிதான் ஆன்ட்டி ஹீரோவாக செய்திருப்பார். ஒருமுறை, பாலசந்தர் சாரைப் பார்க்கும் போது கூட, ‘இன்றைக்கு ரீமேக் செய்ய ஏற்ற படம் இது. அவ்வளவு பர்பெக்டாக இருக்கிறது சார்’ என்றேன். ரொம்பவே பிடித்த படம் இது.
‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் ‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது’ என்கிற கேள்வி பதில் பாடல். கமல் சாரும் ஸ்ரீதேவியும் நடித்திருப்பார்கள். இன்னும் எத்தனையோ படங்கள் இருக்கின்றன. எவ்வளவோ பாடல்கள் இருக்கின்றன.
வாழ்க பாலசந்தர் புகழ். இந்த நாளில், பாலசந்தர் சார் குடும்பத்தாருக்கும் கவிதாலயா நிறுவனத்திற்கும் வாழ்த்துகள்.
இவ்வாறு அருண் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
38 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
4 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
சுற்றுலா
4 hours ago
சினிமா
4 hours ago