அசோக் செல்வனின் அடுத்த படத்தின் பணிகள் தொடக்கம்

By செய்திப்பிரிவு

ஸ்வாதினி - அசோக் செல்வன் இணையும் படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஓ மை கடவுளே'. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்துக்குப் பிறகு அசோக் செல்வனின் அடுத்த படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதனிடையே தமிழ் - தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் புதிய படமொன்றில் நடித்து வருகிறார் அசோக் செல்வன். அனி சசி இயக்கி வரும் இந்தப் படத்தில் நித்யா மேனன் மற்றும் ரீத்து வர்மா இருவரும் நடித்து வருகிறார்கள்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ஸ்வாதினி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அசோக் செல்வன். இதன் பணிகள் சின்ன பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் அசோக் செல்வனுக்கு நாயகியாக நிஹாரிகா நடிக்கவுள்ளார். இவர் 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது நினைவு கூரத்தக்கது.

இந்தப் படத்தின் இசையமைப்பாளராக லியான் ஜேம்ஸ், ஒளிப்பதிவாளராக ஏ.ஆர்.சூர்யா மற்றும் படத்தொகுப்பாளராக ரிச்சர்ட் கெவின் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

5 hours ago

ஆன்மிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்