புதுமுக இயக்குநர் ஸ்வாதினி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அசோக் செல்வன்.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஓ மை கடவுளே'. ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்துக்குப் பிறகு அசோக் செல்வனின் அடுத்த படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இதனிடையே தமிழ் - தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் புதிய படமொன்றில் நடித்து வருகிறார் அசோக் செல்வன். அனி சசி இயக்கி வரும் இந்தப் படத்தில் நித்யா மேனன் மற்றும் ரீத்து வர்மா இருவரும் நடித்து வருகிறார்கள்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அசோக் செல்வன். கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் ஸ்வாதினி இயக்கவுள்ளார். இவர் இயக்குநர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இந்தப் படத்தில் அசோக் செல்வனுக்கு நாயகியாக நிஹாரிகா நடிக்கவுள்ளார். இவர் 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது நினைவு கூரத்தக்கது.
கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
சினிமா
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago