மலையாளத்தில் பெரும் வரவேற்பு பெற்ற 'ஜோசப்' படத்தின் தமிழ் ரீமேக், இயக்குநர் பாலா தயாரிப்பில் தொடங்கப்பட்டுள்ளது.
துருவ் விக்ரம் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'வர்மா'. 'அர்ஜுன் ரெட்டி' ரீமேக்காக உருவான இந்தப் படம் தயாரிப்பாளருக்குப் போதிய திருப்தி தராததால் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் இணை இயக்குநரான கிரிசாயா இயக்கி ‘ஆதித்ய வர்மா’ வெளியானது.
'வர்மா' சர்ச்சைக்குப் பிறகு, தான் அடுத்து இயக்கவுள்ள படத்தின் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார் இயக்குநர் பாலா. இதன் ஆரம்பக்கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், தனது தயாரிப்பில் புதிய படமொன்றைத் தொடங்கியுள்ளார் பாலா.
மலையாளத்தில் எம்.பத்மகுமார் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், ஆத்மியா ராஜன், மாளவிகா, திலேஷ் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான படம் 'ஜோசப்'. இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, இதன் ரீமேக் உரிமையை ஆர்.கே.சுரேஷ் கைப்பற்றினார்.
தற்போது 'ஜோசப்' ரீமேக்தான் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரீமேக்கையும் 'ஜோசப்' படத்தின் இயக்குநர் எம்.பத்மகுமாரே இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஜனவரி 20-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
24 mins ago
இந்தியா
22 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
உலகம்
3 hours ago
வணிகம்
3 hours ago
சினிமா
3 hours ago