சபரிமலையில் இளையராஜாவுக்கு ஜன.15-ம் தேதி ‘ஹரிவராசனம்’ விருது

By செய்திப்பிரிவு

ஜனவரி 15-ம் தேதி சபரிமலையில் நடைபெறும் விழாவில் இளையராஜாவுக்கு 'ஹரிவராசனம்' விருது வழங்கப்படவுள்ளது.

மத நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாட்டுக்காகச் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு ‘ஹரிவராசனம்’ என்ற விருதை கேரள அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு, சான்றிதழ், கேடயம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

இந்நிலையில், 2020-ம் ஆண்டுக்கான ‘ஹரிவராசனம்’ விருது, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்பட உள்ளது. ‘‘சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஜனவரி 15-ம் தேதி மகர சங்கராந்தி (பொங்கல் பண்டிகை) நாளில் நடக்க உள்ள விழாவில் ‘ஹரிவராசனம்’ விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட உள்ளது என்று கேரள அரசின் முதன்மைச் செயலாளர் கே.ஆர்.ஜோதிலால் தெரிவித்துள்ளார். அதே நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ‘வணக்கத்துக்குரிய இசைஞானி’ என்ற பட்டமும் வழங்கப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

42 mins ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்