விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத் நடித்து வரும் 'தலைவி' படத்தில் சசிகலாவாக நடிக்க ப்ரியாமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத் நடிப்பில் உருவாகும் படம் 'தலைவி'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது.
இதில் மதுபாலா ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால், அவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பதைப் படக்குழுவினர் தெரிவிக்கவில்லை. எம்.ஜி.ஆராக நடிக்க அரவிந்த்சாமி ஒப்பந்தமாகியுள்ளார்.
தற்போது 'தலைவி' படத்தில் சசிகலாவாக நடிக்க ப்ரியாமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் நடிக்கச் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும், மும்பையில் விரைவில் தொடங்கவுள்ள படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளதாகவும் தெரிகிறது.
அடுத்த aaண்டு ஜூன் 26-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளானது நினைவுகூரத்தக்கது. 'தலைவி' படத்தின் திரைக்கதையை இயக்குநர் ராஜமெளலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் எழுதியிருக்கிறார்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் 'தலைவி' என்ற பெயரிலேயே உருவாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ள இந்தப் படத்துக்கு ஹாலிவுட் ஒளிப்பதிவாளரான விஷால் விட்டல் ஒளிப்பதிவு செய்து வருகிறார். விஷ்ணு இந்தூரி மற்றும் சைலேஷ் ஆர் சிங் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
சுற்றுலா
6 hours ago