ஒரு வார இடைவெளியில் ஜீத்து ஜோசப்பின் 2 படங்கள் வெளியீடு

By செய்திப்பிரிவு

ஒரு வார இடைவெளியில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள 2 படங்கள் வெளியாகவுள்ளது.

க்ரைம் த்ரில்லர் பாணியிலான படங்களை இயக்கி வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர் ஜீத்து ஜோசப். 2013-ம் ஆண்டு மோகன்லால், மீனா நடித்த 'த்ரிஷ்யம்' திரைப்படம் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் 'த்ரிஷ்யம்' ரீமேக்கில் கமல், கவுதமி, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கி வந்தவர், இந்தியில் 'தி பாடி' என்ற படத்தை இயக்கினார். இதில் இம்ரான் ஹாஸ்மி, ரிஷி கபூர், வேதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் பிரபலமான ஸ்பானிஷ் படமான 'தி பாடி' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திப் படங்கள் எப்போதுமே இறுதிக்கட்டப் பணிகளுக்கு நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்வார்கள். இதனால், இந்தப் பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டே தமிழில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் நடித்த 'தம்பி' படத்தையும் இயக்கி முடித்தார். இதன் அனைத்து பணிகளும் முடிவடைந்து டிசம்பர் 20-ம் தேதி வெளியாகவுள்ளது.

இதனிடையே 'தி பாடி' இந்திப் படத்தின் பணிகளும் முடிவடைந்து டிசம்பர் 13-ம் தேதி வெளியீடு என்று அறிவித்துள்ளனர். இதன் மூலம் ஒரு வார இடைவெளியில் இயக்குநர் ஜீத்து ஜோசப்பின் இரண்டு படங்கள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் வெளியாகியுள்ள 'தி பாடி' படத்தின் ட்ரெய்லர் மற்றும் 'தம்பி' படத்தின் டீஸர் இரண்டுக்குமே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்