நவம்பர் 15-ம் தேதி வெளியாகிறது ஆக்‌ஷன்

By செய்திப்பிரிவு

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள 'ஆக்‌ஷன்' திரைப்படம் நவம்பர் 15-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

சிம்பு நடிப்பில் வெளியான 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைத் தொடர்ந்து, சுந்தர்.சி - விஷால் கூட்டணி மீண்டும் இணைந்தது. இந்தப் படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, யோகி பாபு உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறது.

தற்போது தணிக்கைக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், இந்தப் படம் நவம்பர் 15-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தணிக்கை விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'ஆக்‌ஷன்' படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டதால், மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் 'துப்பறிவாளன் 2' மற்றும் புதுமுக இயக்குநர் ஆனந்த் இயக்கி வரும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்