கிராமம் சார்ந்த படங்களின் நாயகியாக வட இந்திய நாயகியை நடிக்க வைப்பது ஏன் என்று இயக்குநர் பாண்டிராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ’நம்ம வீட்டுப் பிள்ளை’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இமான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில், தொடர்ச்சியாக வட இந்திய நாயகிகளையே உபயோகப்படுத்துவது ஏன் என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ். இது தொடர்பாக 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், "கிராமம் சார்ந்த படங்களில் வட இந்தியாவைச் சேர்ந்த நாயகிகளை நடிக்க வைப்பது தயாரிப்பாளர்களின் அழுத்தத்தால் தான்.
கடைக்குட்டி சிங்கத்தில் சாயிஷாவை நடிக்க வைத்தது தயாரிப்பளர் தந்த அழுத்தம். 'பசங்க' படத்தில் வேகாவை நடிக்க வைத்ததும் அப்படியே. அவர் அப்போதுதான் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்தார். ஆனால் தயாரிப்பாளர் அவரை நடிக்க வைக்க நிர்ப்பந்தித்தார். அவரை சோபிக்கண்ணு கதாபாத்திரமாக மாற்ற என்னால் இயன்றதைச் செய்தேன்.
ஆனால் 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தில் அனு இம்மானுவேல் கிராமத்துப் பெண் அல்ல. நகரத்திலிருப்பவர் கிராமத்துக்கு வருகிறார் என்பது போலத்தான் கதை. அதனால் அவரை இதில் நடிக்க வைத்தது சரியே” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ்.
முக்கிய செய்திகள்
இந்தியா
32 mins ago
ஓடிடி களம்
33 mins ago
இந்தியா
42 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago