'ஆக்‌ஷன்' வெளியீட்டில் மாற்றம்

By செய்திப்பிரிவு

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆக்‌ஷன்' படத்தின் வெளியீட்டை நவம்பர் மாதத்துக்கு மாற்றியுள்ளது படக்குழு.

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஆக்‌ஷன்'. ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் பணிகள் அனைத்தும் முடிவுற்று, அக்டோபர் 2-ம் வாரத்தில் வெளியிடலாம் என்று வெளியீட்டு ஆலோசனையில் முடிவெடுத்தனர்.

ஆனால், சுந்தர்.சி நாயகனாக நடித்துள்ள 'இருட்டு' படமும் அக்டோபர் 11-ம் தேதி வெளியீடு என அறிவித்துள்ளனர். இதனால், ஒரே சமயத்தில் 2 சுந்தர்.சி படங்கள் வெளியாகும் சூழல் ஏற்பட்டன. மேலும், 'ஆக்‌ஷன்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடியச் சிறிது கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ’ஆக்‌ஷன்’ படத்தின் வெளியீட்டை நவம்பர் மாதத்துக்குத் தள்ளிவைத்துவிட்டது படக்குழு. இன்னும் வெளியீட்டுத் தேதி மட்டும் இறுதி செய்யப்படாமல் உள்ளது. 'ஆக்‌ஷன்' படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டதால், தற்போது புதுமுக இயக்குநர் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

18 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்