அஹ்மத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படம் 'பேபி' ரீமேக் அல்ல என்று படக்குழு தெரிவித்துள்ளது.
'கோமாளி' படத்தைத் தொடர்ந்து லக்ஷமண் இயக்கத்தில் உருவாகும் படத்திலும், அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி. இதில் அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் படம் பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது.
தாப்ஸி, ரகுமான் உள்ளிட்ட பலர் ஜெயம் ரவியுடன் நடித்து வரும் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கி முடிவுற்றுள்ளது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெறவுள்ளது.
இந்தப் படம் இந்தியில் அக்ஷய் குமார், தாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'பேபி' படத்தின் ரீமேக் என்று பலரும் தகவல்களை வெளியிட்டு வந்தனர். ஏனென்றால், இது இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படமாகும்.
இந்தச் செய்தி தொடர்பாகப் படக்குழுவிடம் விசாரித்த போது, "'பேபி' படத்துக்கும் இந்தப் படத்துக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை. இது அஹ்மத் சார் எழுதிய புதிய கதை. ஸ்பை த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகிறது" என்று தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
4 hours ago
உலகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
வேலை வாய்ப்பு
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
கல்வி
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago