கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் புதிய படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார்.
அஸ்வின், அபய் தியோல், ஐஸ்வர்யா ராஜேஷ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'இது வேதாளம் சொல்லும் கதை'. ரதிந்திரன் இயக்கிய இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதால், சரியான வெளியீட்டுக்காகப் படம் காத்திருக்கிறது.
இந்நிலையில், தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பைத் துரிதமாகத் தொடங்கியுள்ளார் ரதிந்திரன். இதன் படப்பிடிப்பு நீலகிரியில் தொடங்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தயாரித்து வருகிறார். முழுக்க ஹாரர் த்ரில்லர் பாணியில் இதன் கதையை உருவாக்கியுள்ளார் ரதிந்திரன்.
சில நாட்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தின் தயாரிப்பு பணிகளைத் தொடங்கினார் கார்த்திக் சுப்பராஜ். அதனைத் தொடர்ந்து 2-வது படமாக ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் பணிகளைத் தொடங்கியுள்ளார்.
தற்போது தனுஷ் நடிக்கும் படத்தினை இயக்கிக் கொண்டே, 2 படத்தின் தயாரிப்பு பணிகளை கார்த்திக் சுப்புராஜ் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
51 mins ago
ஜோதிடம்
1 hour ago
உலகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago