விஷாலுக்கு நாயகியாகும் ஷ்ரத்தா, ரெஜினா

By செய்திப்பிரிவு

ஆனந்த் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்தின் நாயகிகளாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ரெஜினா நடித்து வருகிறார்கள்.

'ஆக்‌ஷன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் விஷால். இந்தப் படம் 'இரும்புத்திரை 2' என்று முதலில் தகவல் வெளியானது. ஆனால், படக்குழுவினர் வேறொரு தலைப்பைத் தேர்வு செய்யவுள்ளதாகக் கூறினார்கள்.

இந்தப் படத்தைப் புதுமுக இயக்குநர் ஆனந்த் இயக்கி வருகிறார். முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காகக் கோயம்புத்தூர் சென்றுள்ளது படக்குழு. அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இதில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா ஆகியோர் நடித்து வருகிறார்கள். ரோபோ ஷங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். யுவன் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் 'துப்பறிவாளன் 2' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஷால். இதையும் தன் நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளார். இதற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

விளையாட்டு

46 mins ago

தமிழகம்

15 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்