விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்', தீபாவளிக்கு முன்பே வெளிக் கொண்டுவர ஆலோசனையைத் தொடங்கியுள்ளது படக்குழு.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இதில் விஜய் தன் படப்பிடிப்பு பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளார். இந்த மாதத்துக்குள் அந்தப் பணிகளையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.
இந்தப் படம் தீபாவளி வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. இம்முறை அக்டோபர் 27-ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை. அந்த தினத்தில் படம் வெளியிட்டால், வெளிநாடுகளில் கடுமையான வசூல் பாதிப்பு ஏற்படும். இந்த தினம் தான் என முடிவு செய்தால், வெளிநாட்டு உரிமம் விலையைக் குறைக்க வேண்டும் என விநியோகஸ்தர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள்.
ஆனால், படக்குழுவோ அக்டோபர் 24 அல்லது 25-ம் தேதியில் வெளியிட்டால் தமிழகத்திலும் வசூலை அள்ளிவிடலாம் என்று தங்களது வெளியீட்டுத் தேதியை மாற்றத் தீர்மானித்துள்ளது. இதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது. புதிய வெளியீட்டுத் தேதியை டீஸருடன் கூறலாம் என்று திட்டமிட்டுள்ளது.
இதுவரை ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஒரு பாடலை மட்டும் 'பிகில்' படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் 'வெறித்தனம்' என்ற பாடலை வெளியிடலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
இந்தியா
4 mins ago
தமிழகம்
21 mins ago
வாழ்வியல்
12 mins ago
இந்தியா
26 mins ago
தமிழகம்
47 mins ago
சினிமா
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago