நடிகை ரகசியா கொராக், தமிழில் ‘சர்பத்’ படத்தை முடித்துவிட்டு சொந்த ஊரான ஹைதராபாத்தில் ஒரு தெலுங்கு படத்தில் பிஸியாகியுள்ளார்.
‘‘6 வயதிலேயே நடனம், வெளிநாட்டில் கல்லூரி படிப்பு, விளம்பரப் படம், நடிப்பு பயிற்சி என தகுதியை வளர்த்துக்கொண்டு சினிமாவுக்கு வந்திருக்கிறேன். கிராமமும், நகரமும் சார்ந்த பின்னணியில் அமைந்த ‘சர்பத்’ திரைப்படம், தமிழில் எனக்கு முதல் படமாக அமைந்ததில் மகிழ்ச்சி. அதிலும், இணை நடிகர் கதிர் அமைதியான, திறமைசாலி. அவருடன் நடித்த அனுபவம் மறக்க முடியாதது. அடுத்தடுத்து என உடனடியாக படங்களை ஒப்புக்கொள்ளாமல் ‘சர்பத்’ திரைப்படம் வெளியான பிறகு தமிழில் அடுத்த படம் ஒப்புக்கொள்ளலாம் என இருக்கிறேன். இந்த இடைவெளில் ‘ராஜாவாரு ராணிகாரு’ தெலுங்கு படம் அமைந்தது. நல்ல கதை. டைட்டில் ரோல். எப்போதாவதுதான் இதுபோல அமையும் என்பதால் உடனே ஹைதராபாத் ஓடி வந்துவிட்டேன். தமிழில் தனித்த இடம் பிடிக்கணும் என்பதுதான் திரைப்பயணத்தின் நோக்கம்’’ என்கிறார் ரகசியா கொராக்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
சினிமா
3 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
சினிமா
8 hours ago
இந்தியா
8 hours ago