ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ள புதிய தொடர் ‘நாச்சியார்புரம்’. ஒரு காதல் திருமணப் பிரச்சினையால், தலைமுறைகளாய் பிரிந்து கிடக்கும் இரு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் ஒரு நெகிழ்வான அன்பின் கதை.
மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியின் பின்னணியில் இத்தொடர் நகர்கிறது. வெவ்வேறு துருவங்களாகிய இரு குடும்பங்களை சேர்ந்த இளம் தம்பதிகளான கார்த்திக் - ஜோதி தம் காதலுக்காக அனைத்து தடைகளையும் எதிர்கொள்கின்றனர். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இத்தொடர் படமாக்கப்படுகிறது.
வழக்கறிஞர் ஜோதி கதாபாத்திரத்தில் ரச்சிதாவும், ஸ்வீட் ஸ்டால் முதலாளி கார்த்திக்காக தினேஷும் நடிக்கின்றனர். நிஜ வாழ்க்கையிலும் இருவரும் கணவன் - மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. ‘நாச்சியார்புரம்’ மூலம் இருவரும் முதல்முறையாக இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடன் வடிவுக்கரசி, தீபா, வெங்கட், அஷ்வின் கார்த்தி, பிரேமி போன்ற நட்சத்திரங்களும் நடிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
1 hour ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
10 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
க்ரைம்
5 hours ago